search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்மலை முதியவர் பலி"

    பொன்மலை லோகோ செட் முன்பு மயங்கி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி-சென்னை நெடுஞ்சாலை செந்தண்ணீர்புரம் அருகே உள்ள ரெயில்வே டீசல் லோகோ பணிமனை முன்பு சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    அவரை மீட்டு பொதுமக்கள் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இதற்கிடையே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்த நபர் பாலக்கரை பகுதியில் சுற்றி திரிந்து வந்தது தெரிய வந்தது. அவரின் பெயர் விவரம் குறித்த தகவல்கள் தெரியவர வில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×